Showing 1–12 of 38 results

ஆடை துவைக்கும் திரவம்

160.00
அளவு : 500 மில்லி வீட்டு முறை தயாரிப்பு வெளிப்புற உபயோகியத்துக்கு மட்டும் .

கண்ணேறு பொம்மை 

260.00
 கண்ணேறு பொம்மை  தமிழகளின் அடையாளம் என்பதை பெருமளவு அறியப்படாமல்  தற்காலம்  கண் படுவதை  தடுக்கும் ஓர் பொம்மையாக கருதப்படுகிறது, குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த ஆழிப் பேரலையில் அழிந்து மீதமுள்ள தமிழர்கள் இடம்பெயர்ந்து தற்சமயம் உள்ள தமிழகத்தில் குடியேறினர் என்று கூறப்படுகிறது.  அவ்வாறு குடியேறும் பொழுது தான் வாழ்ந்த இடத்தின் நினைவாக சங்கு, மருந்தாக வெள்ளை எருக்கன்செடி வேர், பசிக்கு தேங்காயும் நோய் தொற்றாமல் இருக்க கிருமி நாசினியாக படிகார கற்களையும் ஒரு கயிறில் கட்டி கொண்டு வந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர், மேலும் தன் முன்னோர்கள் நினைவாக அவர்கள் உருவ வடிவத்தையும் கொண்டு வந்த பொருட்களையும் தன் இல்ல வாசலில் கட்டி தொங்க விட்டனர். இந்த பொம்மையில் இடம் பெரும் பொருட்கள்: வெள்ளை எருக்கன் வேர், மூதாதையர் பொம்மை, வில்வக்காய் மற்றும் கடல் சங்கு.

கருங்காலி தோசைக்கல் பிடி

130.00
கருங்காலி தோசைக்கல் பிடியில் துணியை கட்டி எண்ணெய் தொட்டு தோசை ஊற்றும் பொழுது கருங்காலி மரத்தின் மருத்துவ நலன்கள் நம் உடலை வந்து சேரும்.
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக  பயன்படுத்தப் படுகிறது,
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

கருங்காலி மத்து

275.00
கருங்காலி மத்து கொண்டு கீரை, பருப்பு, தயிர் கடைவது, குழந்தைகளுக்கு சோறூட்ட சோறு கடைவது போன்றவற்றிக்கு பயன்படும்,  கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மத்தை பயன்படுத்துவதால் அமமரத்தின் மருத்துவ நலன்கள் நம் உடலை வந்து சேரும்.
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக  பயன்படுத்தப் படுகிறது,
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி ஓகக்கலை விரிப்பு

400.00
அளவு: 30x70
பவானி ஜமுக்காளம் முறையே தயாராகும்  கைத்தறி ஓகக்கலை தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.

கைத்தறி தரை விரிப்பு 40×80

250.00
அளவு: 40 x 80
மூன்று வண்ணங்களில் கிடைக்கும்
பவானி ஜமுக்காளம் முறையே மறுசுழற்சி முறையில் தயாராகும் நூல்கள் கொண்டு நெய்யப் பட்ட தரை விரிப்பு.
ஈரோட்டுக்கு அருகிலுள்ள பவானி நகரம் நெசவுத்தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். ஈரோடு மாவட்டம் பவானி, ஜமுக்காள நகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கு பல ஆண்டுகளுக்கு மேல் ஜமுக்காளம் தொழில் நடைபெற்று வருகின்றது. பவானி கைத்தறி ஜமுக்காளம் பருத்தி நூல் மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இயந்திரத்தின் உதவியின்றி, கைகளால் தயார் செய்யப்படுவதே இதன் சிறப்பு.
நூல் நெசவு, சாயம் மற்றும் வடிவமைப்புகள் தொடர்ந்து நவீனப் படுத்தப்பட்டு வந்தாலும் இவ்விரிப்புகளின் அடிப்படை மரபுகள் இது வரை மீறப்படவில்லை.
இது நீண்டகாலம் உழைக்கக்கூடியது என்பதோடு பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.
பல வண்ணங்களை உள்ளடக்கிய தடிமனான பவானி ஜமுக்காளத்தை பார்க்கும் போதே கலைநயம் பளிச்சிடும். ஜமுக்காளங்களில் இருக்கும் ஓவியங்கள் வெறுமனே பெயின்ட்டாக இல்லாமல் நூல் நெய்தலுடன் இருப்பது தனிச் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாயம் போவதில்லை.
இன்றும் திருமணம், வளைக்காப்பு, காதுகுத்து போன்ற சடங்குகள் நடைபெறுமிடங்களில் பவானி ஜமுக்காளம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அவை மரபின் சின்னங்களாகக் மக்களால் கருதப்படுகின்றது .
பாதுகாக்க பட வேண்டிய பவானி ஜமுக்காளம்
தமிழ்நாட்டின் ஒரு அடையாளம், இனி நாமும் அதை வாங்கி பாரம்பரியம் போற்றுவோம்.

சந்தன அத்தர்

40.00
3 மில்லி ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு  ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை. சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும்.  ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.

சவ்வாது அத்தர்

40.00
3 மில்லி ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு  ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை. சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும்.  ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.

சிரட்டை சொம்பு

500.00
தேங்காய் ஓட்டில் இருந்து தயாரிக்கப்படும் சிரட்டை சொம்பு ஓர் இயற்கை பொருளாகும். சூடான பொருட்கள் அருந்தும் பொழுது எவ்வித வேதிவினை மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கும், நீர், மோர் போன்றவற்றை அருந்தும் பொழுது குளிர்ச்சியை தரும்.

சுரை குடுவை

500.00
நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் இச்சுரை குடுவை நம் பாரம்பரிய சேமிப்பு பெட்டகத்தில் ஓர் அற்புத பொருளாகும்.  பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்க பயன்படும் சுரை குடுவை இயற்கை நமக்களித்த ஓர் வரபிரசாதம். இயற்கை தண்ணீர் குடுவை, இயற்கையான Water jacket, தேன் பல வருடங்களுக்கு புளிப்பு ஏறாமல் கெடாமல் இருக்கும், விபூதி நறுமணம் குறியாயமல் நமத்து போகாமல் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும், சித்த வைத்தியர்கள் தயாரிக்கும் பசுபம், சூரணம் பல வருடங்களுக்கு வீரியம் குறையாமல் இருக்கும்.  இயற்கையான பாதுக்காப்பு உபகரணமாக இருக்கும் சுரை குடுவை இயற்கை பேரிடர் வெள்ளம் வரும் பொழுது குடுவையை பிடித்து கொண்டு தப்பலாம்.

தஞ்சாவூர் கலைத்தட்டு – 7.5″

220.00
சுற்றளவு: 7.5 அங்குலம் தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்விக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடயங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் கலைத்தட்டு – 9.5″

250.00
சுற்றளவு: 9.5 அங்குலம் தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்விக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடயங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.