Showing 1–12 of 66 results

அதிமதுரம்

60.00150.00

அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

அதிமதுரம் பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

தொண்டைப்புண், வரட்டு இருமல், சளி, தாகம் குணமாகும்

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.

அமுக்கரா பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

அருகம்புல் பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

அஸ்வகந்தா பொடி

50.00
எடை: 50 கிராம் பலன்கள்

தாது பலவீனம், நரம்பு உறுதி, மயக்கம் இவைகளுக்கு சிறந்தது.

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  

ஆடாதோடை பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

ஆஸ்துமா, பீனிசம், இருமல், சளி, உடல் தசைவலி சரியாகும்

பயன்படுத்தும் முறை காலை இரவு இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளவும்.  

ஆவாரம் பூ

40.00100.00

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள்

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

உலர் நெல்லி

60.00150.00
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்சனையால் அதிகம் அவதிபடுபவர்கள்  மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும். வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.  

உலர்ந்த செம்பருத்திப்பூ

85.00210.00
செம்பருத்தி பொதுவாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இயற்கை மருத்துவத்திற்கு இந்த செம்பருத்தி பல நம்மைகளை கொடுக்கிறது.செம்பருத்தி இலைகள், பூக்கள் அனைத்தும் மறுத்துவத்திற்காக பயன்படுகிறது.

உலர்ந்த ரோஜா இதழ்

45.00110.00
ரோஜாவில் உள்ள இயற்கை நற்குணங்கள் உங்கள் சருமம் பொலிவடையவும், சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் வல்லது. உங்கள் சருமம் ரோஜா காம்பின் முட்கள் போல இருந்தாலும், அதை ரோஜா மலரின் இதழ்களைப் போல மென்மையடைய செய்ய ரோஜாவினால் முடியும் என்பது அதன் மருத்துவ குணங்களால் நிரூபிக்கப்பட்டவை ஆகும்

ஓமம்

40.00100.00
ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.

கடுக்காய் தோல்

40.00100.00
கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும் கடுக்காயில் அறுசுவைகளில் இருக்கும் உவர்ப்பைச் சுவையைத் தவிர மற்ற ஐந்து வகை சுவைகளாக இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. வாய், தொண்டை, இரைப்பை மற்றும், குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும். காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.