அவ்வையார் படைப்புக் களஞ்சியம்
ஆசிரியர்: தாயம்மாள் அறவாணன்
பக்கங்கள்: 704
அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது.
சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல படைப்புகள், அவ்வையாரின் படைப்புகளாக அறியப்படுகின்றன. அவை அனைத்தும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஆத்தூர், காரங்காடு, துளசிப்பட்டினம், குற்றாலம், முப்பந்தல், தாழக்குடி, குறத்தியரை, ஆலஞ்சேரி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அவ்வையார் கோயில்களைப் பற்றிய பல செய்திகளும் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவ்வையார் நோன்பு பற்றியும் அதை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.
அவ்வையார் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றுள்ள அரிய நூல்.
அற இலக்கியக் களஞ்சியம்
ஆசிரியர்: க.ப. அறவாணன்
பக்கங்கள்: 1008
சமூகவியல் பார்வையில் அற இலக்கியக் களஞ்சியம்
பொருள் அடிப்படையில் பகுப்பும், உரையும், விளக்கமும் பிற அடைவுகளும்
இடம் பெரும் நூல்கள்
திருக்குறள்
நாலடியார்
பழமொழி
நான்மணிக்கடிகை
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
ஆசாரக்கோவை
ஏலாதி
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
முதுமொழிக் காஞ்சி
ஆத்திசூடி
கொன்றைவேந்தன்
நல்வழி
நன்னெறி
நீதிநெறிவிளக்கம்
வாக்குண்டாம்
வெற்றிவேற்கை
நீதிவெண்பா
உலகநீதி
வெண்பாமாலை
பெரும்பொருள் விளக்கம்
விவிலிய நீதிமொழிகள்
ஆதுர சாலை
ஆசிரியர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பக்கங்கள்: 376
மரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த புதினத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? முடியும் என்கிறது புதினம். அந்த காலத்து சித்தர்கள் அதைச் சாதித்துக்காட்டிய விதமும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
“ஆதுர சாலை” ஒரு மருத்துவ புதினம். இந்திய மண்ணின் மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றின் மேனியை அரித்து அழித்துவிட்ட கறையானாக அலோபதி திகழ்வதை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் விவரிக்கிறது.
எழுத்தாளர்:
தேனி சீருடையான்