நம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய ஒன்று பயத்தம் பருப்பு.
அதன் பயன்கள்
நம் உடலின் சீரான இயக்கத்திற்கு மெட்டபாலிசம் அவசியம். அவை சரியாக இல்லையென்று சொன்னால் உங்களுடைய செரிமானம் முதலில் தடை விழும். அதோடு உடலில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த பச்சைப் பயிறில் நிறைய ஃபைபர் இருக்கிறது. இதனை நீங்கள் சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய செரிமானம் துரிதமாக நடைபெறும் .
இன்றைய நவீனப் பிரச்சனையாக கொலஸ்ட்ரால், ஒபீசிட்டி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. நாளடைவில் அதுவே சர்க்கரை நோய், இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. பச்சைப் பயிறு நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது அது செரிமானத்தை வேகமாக செய்வதால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தவிர்க்கப்படுகிறது. இதைத் தவிர உடலில் இருக்கிற கெட்டக் கொழுப்பினை கரைக்கவும் இது மிகவும் உதவுகிறது.
காய்ச்சல் வயிற்று வலி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் போது எந்த உணவையும் சாப்பிடப் பிடிக்காது. அதோடு சோர்வும் அதிகரிக்கும். இவற்றை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது. பச்சைப் பயிறை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சைப் பயிறு எளிதாக செரிக்கும் அதோடு அவை எனர்ஜியையும் கொடுக்கும். வழக்கமாக கஞ்சியை சாப்பிடுவதற்கு பதிலாக பச்சைப் பயிறு வேக வைத்து சாப்பிடலாம்.
நம்முடைய எலும்புகளுக்கும் பற்களுக்கும் அவசியமானது கால்சியம். இந்த பச்சைப் பயிற்சில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது. அதைத் தவிர இதில் சோடியமும் அதிகம். சோடியம். நம்முடைய பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பல் வலி, வாய் துர்நாற்றம்,ஆகியவை இருந்தால் பச்சைப் பயிறு உங்களுக்குப் பயன்படும்.
ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அவை குறைந்தாலும் பிரச்சனை தான் அதிகரித்தாலும் பிரச்சனை தான். ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் பச்சை பயிறு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மக்னீசியம் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க மக்னீசியம் உதவிடுகிறது.
பச்சைப் பயிறு மாணவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுவதற்கு இது தான் முக்கிய காரணம். பச்சைப் பயிறு நம்முடைய கூர்ந்து கவனிக்கும் திறனை அதிகப்படுத்தும். இதில் இரும்புச் சத்து அதிகம். அதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஆகிஸ்ஜனை அதிகப்படுத்தவும் அதனை உடலின் பிற பாகங்களுக்கு கொண்டு செல்லவும் உதவிடுகிறது. இது உங்களுடைய நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.
பச்சைப் பயிறில் ப்ரோட்டீன் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் கல்லீரலுக்கு நன்மை கிடைக்கும். ப்லிருபின் மற்றும் பிலிவெர்டின் ஆகியவை சுரக்க இது உதவுவதினால் கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.
உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று ரத்த ஓட்டம். அதே நரத்தில் எங்கேனும் காயமேற்பட்டு ரத்தம் வந்தால் அது உடனடியாக உறைந்திட வேண்டும். இல்லையென்றால் அது உயிரை எடுத்திடும் பெரிய பிரச்சனையாக கூட மாறிடும். அதனை தவிர்க்கவும் நீங்கள் பச்சைப் பயிறு சாப்பிடலாம். இதிலிருக்கக்கூடிய விட்டமின் கே ரத்த உறைவினை கட்டுப்படுத்துகிறது.
உடலுக்கு நன்மை கொடுக்கிற சர்க்கரை தீமை ஏற்படுத்துகிற சர்க்கரை என இரண்டு வகைகள் இருக்கின்றன. நன்மை கொடுக்கிற சர்க்கரை எளிதாக செரித்து விடும். அது எந்த தீங்கையும் நம் உடலுக்கு ஏற்படுத்தாது. அதோடு இந்த சர்க்கை உங்கள் ரத்ததில் கலந்திடாது அதனால் சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து இதனை எடுத்துக் கொள்வதினால் உடலில் நன்மை தரக்கூடிய சர்க்கரை உருவாக்க வைத்திடும்.மேலும் இதில் விட்டமின் ஏ மற்றும் சி இருக்கிறது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
இந்த பச்சைப் பயிறில் ஏரளமான ஆண்ட்டி ஏஜிங் துகள்கள் இருக்கிறது. இதில் நிறைந்து காணப்படுகிற காப்பார் தான் இதனுடைய பலமே. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் சரும சுருக்கங்கள் இன்றி தப்பிக்கலாம். அதைத் தவிர சருமத்தில் ஏற்படுகிற கரும்புள்ளிகள், அடையாளங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
இதனை நீங்கள் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். பச்சைப் பயிறை வெறும் சட்டியில் வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள், நல்ல பவுடராகவும் வரை அரைக்க வேண்டும். பின்னர் உங்களுக்கு தேவையான அளவு மாவு தனியாக எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சற்று வெது வெதுப்பான நீரைக் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அதனை கழுவிடலாம்.
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு காப்பர் மிகவும் அவசியம்.முடியின் வேர்கால்களுக்கு வலுவூட்ட காப்பர் அவசியம். காப்பர் இருந்தால் மட்டுமே நம் உணவிலிருந்து கிடைக்ககூடிய இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை தலைமுடிக்குப் போய்ச் சேரும். அதனால் காப்பர் அதிகமிருக்கக்கூடிய பச்சைப் பயிறு நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்றைக்கு பலருக்கும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது முடியில் அதீத வறட்சி ஏற்படுவது. வறண்ட முடியிருந்தால் அது சீக்கிரம் உதிரத் துவங்கிடும். அதனை தவிர்க்க வேண்டுமானால் முடியை வறட்சியின்றி நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கும் இந்த பச்சைப் பயிறு பயன்படுகிறது. பச்சைப் பயிறு மாவுடன், க்ரீன் டீ, பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன் எல்லா சேர்த்து ஹேர் பேக் போட்டுக் கொள்ளுங்கள். இது முடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.
பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு
பாசிப்பயறு
——————-
பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் கன்னிய…ாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.
பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர். இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.
தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும். 100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.
பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
மருத்துவக் குணங்கள்:
புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.
நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.
பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான்.
பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.
பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.
பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
பச்சைப் பயறின் தன்மை ஈரலின் பிரச்சினையை அதிகமாக்கும்.
எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Reviews
There are no reviews yet.